Recent Videos

இட்லி தோசை மாவு நீண்ட நாள் புளிக்காமல் இருக்க | Tamil Samayal Tips

இட்லி தோசை மாவு நீண்ட நாள் புளிக்காமல் இருக்க. இது போல் மேலும் சுவையான பாரம்பரிய சமையலைப் பற்றி தெரிந்து கொள்ள: Sattur Parambariya Samayal

இட்லி தோசை மாவு



How to change negative thoughts | Tamil Motivation | Madhu Bhaskaran

How to change negative thoughts with concrete examples? Get the answer from Mr. Madhu Bhaskaran. 

Mr. Madhu Bhaskaran is a very famous HRD trainer and Personal Coach in Kerala , South India. Through his 23 years' experience in the capacity building training, he created the spark in more than one lakh people. He was born in a poor, academically uneducated family in a village in Kerala. At the age of 4, because of the financial struggles of the parents, his family moved to the neighbouring State of Tamil Nadu.
Tamil Motivation Madhu Bhaskaran

விடா முயற்சி தமிழ் வீடியோ - Never Give Up - Tamil Video

Hisham.M

விடா முயற்சி தமிழ் வீடியோ - Never Give Up - Tamil Video

Why are we taller in the morning than in the evening

We are taller in the morning than in the evening! SciNirosh explains you the science behind this mystery in Tamil. 
நாம் சாயங்காலத்தை விட காலையில் சற்று உயரமாகவே இருப்போம். அதற்குரிய விளக்கத்தை இன்றைய SciNirosh Showஇல் அறிந்துகொள்ளுங்கள்.

Five tips to create attractive Tamil Matrimony profile

Tamil Matrimony -  have give beautiful five tips about how to create attractive Tamil matrimony profile.

வீட்டு வாசலில் காத்திருக்கும் மருந்து: கற்பூரவள்ளி

வாசனை மிக்க, மருத்துவ மூலிகையான கற்பூரவள்ளி உடலுக்கு ஏராளமான மருத்துவ நலன்களை அள்ளித்தருகிறது.

இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

கசப்புச் சுவையும், காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.

இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.

வியர்வை பெருக்கியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும், சூட்டைத் தணிக்கும்.

இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.

இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது. கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும், தசைகள் சுருங்குவதைத் தடுக்கும்.

மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

நோய்களை தீர்க்க உதவும் வரப்பிரசாதம்: எலுமிச்சை

எலுமிச்சம் பழமானது மங்களகரமான பழம் மட்டுமல்லாமல் உடலுக்கும் சத்துக்களை தருகிறது.

இதோ எலுமிச்சை தரும் மருத்துவ பயன்கள்

* கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.

* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

* எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

* ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.

* வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

* எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

* எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தரும். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர்.

இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.

* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.

* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.

* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.

அப்பிள் அறிமுகம் செய்யக் காத்திருக்கும் மற்றுமொரு iWatch

அப்பிள் நிறுவனம் உட்பட மேலும் சில நிறுவனங்கள் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏற்கனவே தனது ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அப்பிள் நிறுவனம் அதனை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள நிலையில், தற்போது புதிய தொழில்நுட்பத்திலும், புதிய வடிவமைப்பிலுமான மற்றுமொரு ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் களமிறங்கியுள்ளது.

iOS 7 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள இக்கடிகாரம் பெண்களக்காக 1.3 அங்குல அளவுடைய திரையினையும், ஆண்களுக்காக 1.7 அங்குல அளவுடைய திரையினையும் கொண்டதாக வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய ராசி பலன் 28-05-2014 | Raasi Palan 28-05-2014



மேஷம்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். அஞ்சல் வழியில் ஆச்சர்யமான தகவல் வந்து சேரலாம்.

ரிஷபம்
கனவுகள் நனவாக கார்த்திகேயனை வழிபட வேண்டிய நாள். கொடுக்கல்-வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு பெண்வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணத்தால் நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். விரயங்கள் மேலோங்கும்.

கடகம்
பாக்கிகள் வசூலாகி பரவசப்படும் நாள். பணவரவு அதிகரிக்கும். உங்கள் மணியான யோசனைகளுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும்.

சிம்மம்
தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரலாம். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
முன்னேற்றம் கூட முருகப் பெருமானை வழிபட வேண்டிய நாள். முன்னேற்றத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பொன்-பொருள் சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

துலாம்
கவலைகள் தீரக் கந்தனை வழிபட வேண்டிய நாள். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். செலவுகள் வரிசையாக வந்து கொண்டேயிருக்கும். வாகனப் பழுதுகள் ஏற்படலாம்.

விருச்சகம்
முன்னேற்றம் கூட முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். வரவு திருப்தி தரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

தனுசு
தடைகள் விலகும் நாள். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்று மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை உண்டு. அரசியல்வாதிகளால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள்.

மகரம்
வெளியுலகத் தொடர்பு விரிவடையும் நாள். தொழில், வியாபாரத்தில் அனுபவம் நிறைந்த ஆட்கள் வந்து சேர்வர். கல்யாணக் கனவுகள் நனவாகும். ஆடை-ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.

கும்பம்
விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும் நாள். பணம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அரசியல்வாதிகளின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Tips for long hairs

very useful information about Tips for long hairs

Tamil Hair Care, Dandruff, Split Ends Tips

Swati Gupta of Bodycraft Salon explains hair care essentials and discusses how dandruff, split ends, and hair overall can be treated and maintained so your hair stays healthy

How to teach grit & perseverance to children – Peppers TV

சிறகடிக்கும் மனசு is a program on Peppers TV hosted by Smt. Rajarajeswari and addresses questions regarding psychology , relationships and inter-personal interactions. In this episode the psychologist talks about how its important to have perseverance and grit to be successful in life.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. Tamil Tips and Tricks - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger